

புதுடெல்லி:
பீகார் சட்டசபை தேர்தல் அறிவிப்பு குறித்து அம்மாநில பா.ஜனதா பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது:-
பீகாரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணி பெறும். நான்கில் 3 பங்கு
பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “தேர்தலை சந்திக்க பா.ஜனதா முற்றிலும் தயாராக இருக்கிறது. நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி தரும்” என்றார்.