மகாராஷ்டிரா மாநிலத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக இருந்தவர் ராவ்சாஹிப் பாட்டீல் தான்வே. இவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென இன்று அறிவித்துள்ளார்.
இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் பா.ஜ.க. மாநில தலைவர் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.