சீன தலைநகர் பீஜிங்கில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை

சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் இல்லை என்று நகராட்சி சுகாதார ஆணையம் கூறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்:

சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் இல்லை என்று நகராட்சி சுகாதார ஆணையம் கூறுகிறது.

அதுமட்டுமின்றி வெளி இடங்களில் இருந்து பீஜிங் வந்தவர்களுக்கும் புதிதாக தொற்று பதிவாகவில்லை. யாருக்கும் அறிகுறிகளற்ற தொற்று பாதிப்போ, கொரோனா பாதிப்பின் சந்தேகமோ கூட ஏற்படவில்லை.

கடந்த 19-ந் தேதிக்கு பின்னர் 24-ந் தேதியன்றுதான் வெளி இடத்தில் இருந்து வந்த ஒருவருக்கு அங்கு தொற்று உறுதியானது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com