

முதல் ஆட்டம் மழையால் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாம் உலக் ஹக் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 6 ரன்னிலும், முகமது ரிஸ்வான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் அப்போட், மிட்செல் ஸ்டார்க் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2-வது ஓவரின் ஐந்தாவது பந்திலேயே ஆஸ்திரேலியா விக்கெட் ஏதுமின்றி 109 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.