பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வரலாற்றில் இடம்பிடித்த ஆஸ்திரேலிய எம்.பி.

ஆஸ்திரேலிய பாராளுமன்ற அவைக்குள் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியதன் மூலம் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வரலாற்றில் இடம்பிடித்த ஆஸ்திரேலிய எம்.பி.
Published on

ஆஸ்திரேலியாவில் பசுமைக் கட்சி தலைவர்களில் ஒருவர் லாரிசா வாட்டர்ஸ். குயீன்ஸ்லேண்ட் செனட்டரான (பாராளுமன்ற மேல்சபை எம்.பி.) இவர், சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்காக மகப்பேறு விடுப்பில் சென்றிருந்த அவர், விடுப்பு முடிந்து, 2 மாத பெண் குழந்தையுடன் நேற்று பாராளுமன்றத்திற்கு வந்து, முக்கிய வாக்கெடுப்பில் பங்கேற்றார்.

வாக்கெடுப்பின்போது, தனது இருக்கையில் அமர்ந்தபடி, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய பாராளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இத்தகவலை டுவிட்டரில் பதிவு செய்துள்ள வாட்டர்ஸ், ‘பாராளுமன்ற அவையில் பாலூட்டப்படும் முதல் குழந்தை எனது மகள் ஆலியா என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்’ என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com