சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி 500 பேர் பலி, 810 பேர் மாயம் - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 810-க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி 500 பேர் பலி, 810 பேர் மாயம் - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 810-க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான சியரா லியோனில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 800-க்கும் அதிகமானோரின் நிலை இன்னும் தெரியவில்லை எனவும் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com