பாரதியார் பல்கலைக்கூடத்தில் பெண் ஊழியருக்கு ‘செக்ஸ்’ தொல்லை - உதவி பேராசிரியர் கைது

புதுச்சேரியில் பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாடலிங்காக பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கு ‘செக்ஸ்’ தொல்லை உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் பெண் ஊழியருக்கு ‘செக்ஸ்’ தொல்லை - உதவி பேராசிரியர் கைது
Published on

புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பத்தில் அரசுக்கு சொந்தமான பாரதியார் பல்கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கலைகள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கூடத்தில் அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெருவை சேர்ந்த சுசிலா (வயது 63) என்ற பெண் மாடலிங்காக வேலை பார்த்து வந்தார்.

சிற்பங்கள் வடிவமைக்க மற்றும் ஓவியங்கள் வரைய மாடலிங்காக போஸ் கொடுப்பது இவரது பணியாகும். பல்கலைக்கூடத்தில் ராஜேந்திரன் (58) என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று சுசிலா பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ராஜேந்திரன் சுசிலாவிடம் சிறிய வேலை இருக்கிறது. எனது அறைக்கு வா என்று கூறினார்.

அங்கு வந்த சுசிலாவிடம் ராஜேந்திரன் செக்ஸ் ரீதியாக அத்துமீற முயன்றதாக தெரிகிறது. உடனே சுசிலா அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

இதுபற்றி அவர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com