மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி டெல்லி திரும்பினார்

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாயகம் திரும்பினார். #ArunJaitley #ArunJaitleyreturns
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி டெல்லி திரும்பினார்
Published on

புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால் கடந்த ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனயில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

அப்போது ரெயில்வேத்துறை மந்திரி பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின்னர், உடல்நிலை சீரானதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் நிதி மந்திரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கடந்த மாதம் 15-ம் தேதி மருத்துவ மேல்சிகிச்சைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றார். அவர் எப்போது இந்தியா திரும்புவார்? என்பது பற்றிய விபரம் வெளியிடப்படாத நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை அவருக்கு பதிலாக இடைக்கால நிதி மந்திரி புயுஷ் கோயல் சமீபத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அருண் ஜெட்லி இன்று விமானம் மூலம் டெல்லி திரும்பினார். இதுதொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். #ArunJaitley #ArunJaitleyreturns 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com