பூமியான்பேட்டையில் பெண்ணை ஆபாசமாக திட்டியவர் கைது

பூமியான்பேட்டையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார்.
பூமியான்பேட்டையில் பெண்ணை ஆபாசமாக திட்டியவர் கைது
Published on

புதுச்சேரி:

பூமியான்பேட் பாவாணர் நகரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 32). இவரது உறவினர் மகள் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த மெக்கானிக் சூரியா (21) என்பவர் காதலித்து வந்தார்.

அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கீதா அவர்களை பிரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சூரியா சங்கீதாவின் வீட்டுக்கு வந்து அவரை ஆபாச வார்த்தைகள் கூறி திட்டினார்.

இதுபற்றி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் சூரியாவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com