

சென்னை:
தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
சளித்தொல்லை காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சில தினங்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகனை சந்தித்தார். அப்போது அவரது உடல் நிலை குறித்து கேட்டு அறிந்தார்.
அன்பழகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் பெற்று வருகிறார். விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். #MKStalin #KAnbazhagan