

வட இந்தியாவில் டெல்லியில் தொடங்கி அரியானா, ராஜஸ்தான், குஜராத் என நாட்டின் மேற்கு பகுதிவரை ஆரவல்லி மலைத்தொடர் நீண்டு விரிகிறது. சுமார் 700 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மலைத்தொடரில் ராஜஸ்தான் பகுதியில் இருந்த 31 குன்றுகளை சுரங்க மாபியாக்கள் சுரண்டி எடுத்து விட்டதாக மத்திய அரசின் அதிகாரம் பெற்ற குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.