பா.ம.க. இளைஞர் அணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு

பா.ம.க. இளைஞர் அணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் பொதுக் குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு
Published on

போரூர்:

பா.ம.க. மாநில பொதுக் குழு கூட்டம் வேலப்பன் சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பா.ம.க. தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவர் 9-வது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் பொதுக் குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.

மாநில பொது செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா, இணை பொது செயலாளராக இசக்கி, அமைப்பு செயலாளராக செல்வக்குமார், மகளிரணி தலைவியாக நிர்மலா ராஜா, செயலாளராக சிலம்பு செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில நிர்வாகிகள் 1,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பொதுக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, வேலு மற்றும் கே.என்.சேகர், செல்வராஜ், பாலயோகி, எம்.கே.பிரசாத், ஞானபிரகாஷ், அனந்தகிருஷ்ணன், டெல்லிபாபு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com