கண்ணகிநகரில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அ.ம.மு.க. பெண் நிர்வாகி சிக்கினார்

கண்ணகிநகரில் ஓட்டு போடுவதற்காக பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்த அ.ம.மு.க. பெண் நிர்வாகியை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். #AMMK
கண்ணகிநகரில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அ.ம.மு.க. பெண் நிர்வாகி சிக்கினார்
Published on

சோழிங்கநல்லூர்:

சென்னை கண்ணகி நகர், எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பகுதிகளில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது பெண் ஒருவர் ஓட்டு போடுவதற்காக பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் ரேகா என்பதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த 10 ஆயிரத்து 400 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். #AMMK

X

Maalai Malar
www.maalaimalar.com