ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்தல்

பரங்கிமலை ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என மக்களவையில் அ.தி.மு.க. எம்பி வலியுறுத்தினார். #ChennaiTrainAccident #ADMK
ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்தல்
Published on

சென்னையில் மின்சார ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த சிலர், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.

ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல் மத்திய அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com