

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உயர்நீதிமன்ற மன்றம் உறுதி செய்துள்ளது. சபாநாயகரின் முடிவு தவறு இல்லை என்று கூறிய நீதிபதி சத்தியநாராயணன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவோ, 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவோ தடை இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் மொத்தம் 20 தொகுதிகள் காலியாகின்றன. 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.