ஆதம்பாக்கத்தில் பெண் என்ஜினீயரை எரித்துக்கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ஆதம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் இந்துஜாவை எரித்துக்கொன்ற வழக்கில் வாலிபர் ஆகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
Published on

வேளச்சேரி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (29). இவரும், ஆதம்பாக்கம் சரசுவதி நகரை சேர்ந்த இந்துஜா (23) என்பவரும் காதலித்தனர். இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருந்தார்.

இந்த நிலையில் ஆகாசை காதலிக்க இந்துஜா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ் இந்துஜா வீட்டுக்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் உடல்கருகி அதே இடத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அதை தடுக்க வந்த இந்துஜாவின் தாயார் ரேணுகா, தங்கை நிவேதிதாவுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.


இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துஜாவின் தாயார் ரேணுகா உயிரிழந்தார். தங்கை நிவேதிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com