அபிநந்தனின் வீரம், சுயநலமின்மை நமக்கெல்லாம் பாடம் - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

அபிநந்தன் தனது வீரம், சுயநலமின்மை மூலம் நமக்கெல்லாம் பாடம் கற்பித்துள்ளதாக சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #AbhinandanReturn #WelcomeHero #WelcomeHomeAbhinadan #SachinTendulkar
அபிநந்தனின் வீரம், சுயநலமின்மை நமக்கெல்லாம் பாடம் - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்
Published on

கடந்த மாதம் 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.

பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com