பாகிஸ்தான்: நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் பேரணியின் பாதையில் குண்டு வெடிப்பு - 35 பேர் காயம்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் பேரணி நாளை நடக்க உள்ள நிலையில் அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், லாகூர் நகரில் நாளை நடைபெறும் பேரணியில் பங்கேற்க உள்ளார். இஸ்லாமாபாத் நகரில் இருந்து லாகூர் வழியாக இந்த பேரணி நடைபெற உள்ளது.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் பேரணி நடைபெறும் பாதையில் நேற்றிரவு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில், அங்கிருந்த 35-க்கும் அதிகமானோர்

காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களாக அந்த லாரி அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பின் காரணமாக நவாஸ் ஷெரீப்பின் பேரணி ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com