கர்நாடகாவில் விரைவில் காலியாகும் 3 எம்.பி, 5 எம்.எல்.சி இடங்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் மற்றும் 5 எம்.எல்.சி.க்கள் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் அந்த இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll
கர்நாடகாவில் விரைவில் காலியாகும் 3 எம்.பி, 5 எம்.எல்.சி இடங்கள்
Published on

கர்நாடக மாநில முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பா ஷிமோகா எம்.பி.யாக இருந்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் ஷிகாரிபூரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் ஷிமோகா எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். எடியூரப்பாவை தவிர மொலகல்முறு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற பல்லாரி எம்.பி ஸ்ரீராமுலு மற்றும் மெலுகோட் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற மாண்யா எம்.பி சி.எஸ். புட்டராஜூ ஆகியோர் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com