மதுரை அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல் - 3 பேர் கைது

கூட்டுறவு சங்க தேர்தலில் ஓட்டு சீட்டை கிழித்து வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல் - 3 பேர் கைது
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் கூட்டுறவு சங்கத்துக்கு நேற்று தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தேர்தல் அலுவலர் கதிர்வேல் மேற்பார்வையில் ஓட்டுப்பதிவு தொடங்க இருந்தபோது திருமோகூரை சேர்ந்த ரமேஷ், புதூர் தாமரைப்பட்டியை சேர்ந்த போஸ், மகாராஜன் ஆகிய 3 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறில் ஈடுபட்டனர்.

தேர்தல் அதிகாரியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன் அங்கிருந்த ஓட்டு சீட்டுகளையும் கிழித்து எறிந்தனர்.

இதுகுறித்து கதிர்வேல் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து ரமேஷ், போஸ், மகாராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com