

2007 மே 16: மத்திய தொலை தொடர்பு துறை மந்திரியாக ஆ.ராசா பொறுப்பேற்றார்.
2007 ஆகஸ்ட் 27: 2ஜி அலைக்கற்றைக்கான ஒதுக்கீடு முறையை மத்திய தொலைத்தொடர்பு துறை வழங்கியது.
2007 செப்டம்பர் 25: அலைக்கற்றை உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 1-ந்தேதி கடைசி நாள் என்று தொலைத்தொடர்பு துறை அறிவித்தது.
2007 அக்டோபர் 1: 46 நிறுவனங்கள் 575 விண்ணப்பங்களை தாக்கல் செய்தன.
2007 நவம்பர் 2: பிரதமர் மன்மோகன்சிங் ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், “2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டை நேர்மையான முறையில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
2007 நவம்பர் 22: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஏலம் நடந்த சரியான முறையில் நடைபெறவில்லை என மத்திய நிதி அமைச்சகம் கூறியது.
2008 ஜனவரி 10: முதலில் வருபவர்களுக்கே 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கப்படும் என்று தொலை தொடர்பு துறை அறிவித்தது.
2008 பிப்ரவரி: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம், யுனிடெட், டாடா நிறுவனங்கள் அந்த அலைக்கற்றைகளை கூடுதல் விலைக்கு விற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2009 மே 4: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்து இருப்பதாக என்.ஜி.ஒ. நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியது.
2009 ஜூன் 4 : 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
2009 ஜூலை 1 : அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் புதிய முறை கடைபிடித்தது சட்ட விரோதம் என்று டெல்லி ஐகோர்ட்டு அறிவித்தது.
2009 அக்டோபர் 21: சி.பி.ஐ. விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
2009 அக்டோபர் 22: மத்திய தொலை தொடர்பு துறை அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
2009 நவம்பர் 16: நீராராடியா பேசிய டேப் வெளியானது. இதையடுத்து வருமான வரித்துறை உதவியை சி.பி.ஐ. நாடியது.
2009 நவம்பர் 20: தொலை தொடர்பு துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் இருப்பதாக வருமான வரித்துறை தகவல் மூலம் தெரிய வந்தது. ஆ.ராசாவிடம் நீரா ராடியா நேரடி தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
2010 மார்ச் 31: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு வெளிப்படையாக நடக்கவில்லை என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவித்தது.
2010 மே 6: ஆ.ராசா, நீராராடியா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டது.
2010 ஆகஸ்ட் 18: ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது.
2010 செப்டம்பர் 13: அலைக்கற்றை ஏலத்தில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதற்கு ஆ.ராசா 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
2010 செப்டம்பர் 24: ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டை சுப்பிரமணியசாமி அணுகினார்.
2010 செப்டம்பர் 27: 2ஜி அலைக்கற்றை உரிமம் முறைகேட்டில் ஆ.ராசாவுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க இயலாது என்று அமலாக்க துறை சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது.
2010 அக்டோபர் : அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக மத்திய தணிக்கைத் துறை கூறி இருப்பதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. மெத்தனமாக நடத்துவதாக சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
2010 நவம்பர் 10: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவித்தது.
2010 நவம்பர் 11: மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிவிப்பை தொலை தொடர்பு துறை ஏற்க மறுத்தது. ஆ.ராசாவுக்கு நெருக்கடி முற்றியது.
2010 நவம்பர் 15: ஆ.ராசா மத்திய மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
2011 பிப்ரவரி 10: ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
2011 பிப்ரவரி 17: ஆ.ராசா கைதானார். திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
2011 பிப்ரவரி 24: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறி இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்தது.
2011 மார்ச் 14: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
2011 மார்ச் 29: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஊழல் வழக்கில் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் கைதானார்கள்.
2011 ஏப்ரல் 2: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஊழல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2011 ஏப்ரல் 25: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஊழல் வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2011 மே 20: கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
2011 அக்டோபர் 23: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக 17 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
2011 நவம்பர் 11: சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி சைனி முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியது.
2011 நவம்பர் 28: கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆனார்.
2011 டிசம்பர் 12: அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சி.பி.ஐ. 3-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
2012 பிப்ரவரி 2: ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்தது.
2012 பிப்ரவரி 4: 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிதம்பரத்தை சேர்க்க கோர்ட்டு அனுமதி மறுத்தது.
2012 பிப்ரவரி 23: சுப்பிரமணியசாமி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
2014 ஏப்ரல் 25: ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவர் உள்பட 10 பேர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
2014 நவம்பர் 10: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு வழக்கில் இறுதி விசாரணை தொடங்கியது.
2015 ஜூன் 1: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டுக்காக கலைஞர் டி.வி. ரூ.200 கோடி பெற்றதாக கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்தது.
2015 நவம்பர் 3: வழக்கில் இருந்து விடுவிக்க கனிமொழி சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை ஏற்க மறுத்து சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
2017 ஏப்ரல் 19: விசாரணை முடிந்தது.
2017 அக்டோபர் 25: தீர்ப்பு தேதியை நவம்பர் 7-ந்தேதிக்கு சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி தள்ளிவைத்தார்.
2017 நவம்பர் 7: தீர்ப்பை தேதியை மீண்டும் ஒத்திவைத்து நீதிபதி சைனி அறிவித்தார்.
2017 டிசம்பர் 5: டிசம்பர் 21-ந்தேதி 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என நீதிபதி சைனி அறிவித்தார்.
2017 டிசம்பர் 21: 2ஜி வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிபதி சைனி வெளியிட்டார்.
இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழிஉள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.