2018-19ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

2018-19ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். #publicexam #timetablereleased
2018-19ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
Published on

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, 10-ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29 வரையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், 11-ம் வகுப்புகளுக்கு மார்ச் 6 முதல் 22 வரையிலும், 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் 500 மையங்கள் கேட்டாலும் கொடுக்க தயார் எனவும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மொழிப்பாடங்களில் சிறப்பாக கற்க ஆசிரியர்கள் உதவுவார்கள் என்றும், அதற்கு பெரிதும் உதவியாக ஸ்மார்ட் வகுப்பு திட்டம் இருக்கும் எனவும் கூறினார். 11-ம் வகுப்புகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் பாடங்கள் நீட் குறித்ததாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

மேலும், நீட் தேர்வில் குறைந்தது 250 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com