ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் - ராணுவம் மோதல்: 40 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் மாகாணத்தில் இன்று ராணுவத்துக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
தலிபான் தாக்குதல்
தலிபான் தாக்குதல்
Published on

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குன்டுஸ் மாகாணத்தின் தலைநகரான குண்டுஸ் நகரில் இன்று பயங்கரவாதிகளுக்கு ராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதலில் 38 பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படைகளை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com