செங்கிப்பட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது

செங்கிப்பட்டியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி, சானூரப் பட்டி கடைவீதி மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே செங்கிப்பட்டி போலீசார் நேற்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு மக்கள் வெளியே வருவதற்கான வழங்கப்பட்டுள்ள அட்டைகள் இல்லாமலும், முககவசம் அணியாமலும் வாகனங்களில் வந்தவர்களை பிடித்தனர்.

இது குறித்து போலீசார் 10 பேர் மீது வழக்குபதிவு செய்து 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com