அருமையான வெந்தயக்கீரை கார குழம்பு

சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வெந்தயக்கீரை கார குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெந்தயக்கீரை கார குழம்பு
வெந்தயக்கீரை கார குழம்பு
Published on

வெந்தயக் கீரை - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10 பல்
புளி - தேவையான அளவு
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி

வெல்லம் - ஒரு சிறிய துண்டு

வெந்தயக் கீரையை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும்.

பின் சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கவும்.

அடுத்து சாம்பார் தூள், சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பெருஞ் சீரகம் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

கடைசியாக வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

மேலே நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி பரிமாறவும்.

சூப்பரான வெந்தயக்கீரை கார குழம்பு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com