சத்தான டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்

காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று கேழ்வரகு கீரை ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்
Published on

இட்லி மாவு - 1 கப்
முழு கேழ்வரகு - 1 கப்
கீரை - 1 கட்டு (சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை சிறிது ஆயில் இல் வதக்கி சேர்க்கலாம்)
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை :

* வெங்காயம், கீரை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

* கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

* அடுத்து அதில் வெங்காயம், கீரை, ப.மிளகாய், உப்பு, வதக்கிய கீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.

* சத்தான சுவையான கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com