

இட்லி மாவு - 1 கப்
முழு கேழ்வரகு - 1 கப்
கீரை - 1 கட்டு (சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை சிறிது ஆயில் இல் வதக்கி சேர்க்கலாம்)
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை :
* வெங்காயம், கீரை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.
* கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
* அடுத்து அதில் வெங்காயம், கீரை, ப.மிளகாய், உப்பு, வதக்கிய கீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.