நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த நூல்கோல் சூப்

நூல்கோலில் நீர்ச்சத்துடன் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த வகையில் இந்த நூல்கோல் சூப் செய்முறையை பார்க்கலாம்.
நூல்கோல் சூப்
நூல்கோல் சூப்
Published on

தேவையான பொருட்கள்

நூல்கோல் - 2
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நூல்கோலைதோல் சீவியப் பொடியாக அரிந்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

நூல்கோல் அரை வேக்காடு வெந்ததும், வெங்காயம், தக்காளியை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கிவிடுங்கள்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் கேரட் துருவலைச் சேர்த்து வதக்குங்கள்.

பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து மிளகுத் தூளைத்

சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, கொதிக்கும் சூப்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறுங்கள்.

சத்தான நூல்கோல் சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com