மட்டன் கீமா சூப் செய்வது எப்படி

உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். இப்போது மட்டன் கீமா சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
மட்டன் கீமா சூப் செய்வது எப்படி
Published on

மட்டன் கீமா - 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 50 கிராம்
தக்காளி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
புதினா - சிறிது
கொத்தமல்லி - சிறிது
ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு

மிளகு தூள் - 1 ஸ்பூன்

துவரம் பருப்பு, மட்டன் கீமாவை நன்றாக கழுவி வைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் துவரம் பருப்பு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டிய பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

கடைசியாக அதில் புதினா சேர்த்து கிளறி, மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.

விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

சுவையான மட்டன் கீமா சூப் ரெடி!!!

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com