

குதிரைவாலி அரிசி - 4 கப்,
உளுந்து - ஒரு கப்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு ஏற்ப,
தக்காளி - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
வெங்காயம் - ஒன்று,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப.
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
*குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும்.
* மிக்சியில் தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
* சூடான தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்து நிறைந்த குதிரைவாலி தக்காளி தோசை ரெடி.
* தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.