மாலை நேர ஸ்நாக்ஸ் பசலை கீரை பக்கோடா

மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மாலை நேர ஸ்நாக்ஸ் பசலை கீரை பக்கோடா
Published on

பசலைக் கீரை - 1 கட்டு
கடலை மாவு- 1 கப்
பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.

வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.

சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com