search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்குமா?
    X

    நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்குமா?

    • நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வு.
    • உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    சாதாரண நபர்களை காட்டிலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக இருக்குமாம். பெருமாலான நீரிழிவு நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதி வேக முடி உதிர்வு. நீரிழிவு நோயினால் ஏற்படும் முடி உதிர்தலுக்கு சீரான இரத்த ஓட்டம் இல்லாததே என்று சொல்லலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்க காரணம், நீரிழிவு நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களை அடைய முடிவதில்லை. இதனால் உச்சந்தலை நுண்ணறைகள் பலவீனமடைந்து முடி உதிர்தல் ஏற்படுகிறது.

    நாள்பட்ட சர்க்கரை நோய் ஆக்ஸீஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை குறைக்கலாம். இதன் விளைவாக வாஸ்குலர் குறைபாடு இது முடி உதிர்தல், கூந்தல் உடைவு, முடி உதிர்தல் உண்டாக்கும்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, பாலிகுலைட்டிஸ் எனப்படும் பாக்டீரியா தோல்தொற்று ஏற்பட்டு முடி உதிர்வை ஊக்குவிக்கிறது. முடி உதிர்தல் தலையில் மட்டுமின்றி கை, கால்கள் மற்றும் உடம்பின் வேறு பகுதிகளிலும் ஏற்படலாம்.

    நீரிழிவு நோய் உடலில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும், முடியின் வேர்களை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

    மோசமான இரத்த ஓட்டம் முடி உதிர்தலுக்கு பங்களித்தால், நீரிழிவு நோயை நிர்வகித்தல் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி மீண்டும் வளரவும் உதவும்.

    மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினாலும் கூடுதலாக தைராய்டு நோய் இருக்கும் நிலையிலும் முடி உதிரும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு செல்கள் மயிர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தி அலோபீசியா ஏரியேட்டா (திட்டு திட்டாக முடி விழுதல்) என்ற நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

    நீரிழிவு நோயாளிகள் முடி உதிர்தலுக்கு சிகிச்சை

    உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவு அளவாக இருந்தால் மயிர்க்கால்கள் மற்றும் முடியின் முனைகளில் ஆக்ஸிஜன் விநியோகம் தடையில்லாமல் பெற முடிகிறது.

    உணவு முறையில் சர்க்கரை அளவை குறைத்து மெலிந்த புரதங்களை சேர்க்க வேண்டும். இது முடியின் வலிமையை மேம்படுத்தவும், உச்சந்தலையை வலுவாக வைக்கவும் உதவும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×