

கம்பு மாவு - 1 கப்
இட்லிமாவு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கேரட் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, இட்லிமாவு, சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துக்கொள்ளவும்..
அத்துடன் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கேரட் துருவல் போட்டு நன்கு கலந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான கம்பு - கேரட் ஊத்தப்பம் ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.