வினோத் கன்னா இறுதிச்சடங்கில் இளம் நடிகர்கள் பங்கேற்காதது வெட்கக்கேடு: ரிஷிகபூர் வேதனை

நடிகர் வினோத் கன்னா இறுதிச்சடங்கில் இளம் தலைமுறை நடிகர்கள் பங்கேற்காதது வெட்கக்கேடு என்று நடிகர் ரிஷிகபூர் வேதனை தெரிவித்துள்ளார்.
வினோத் கன்னா இறுதிச்சடங்கில் இளம் நடிகர்கள் பங்கேற்காதது வெட்கக்கேடு: ரிஷிகபூர் வேதனை
Published on

இந்த நிலையில், வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கில் இளம் தலைமுறை நடிகர்கள் யாரும் பங்கேற்காததை கண்டு, பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் நேற்று கூறியதாவது:-

இந்த தலைமுறையை சேர்ந்த ஒரு நடிகர் கூட வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதது வெட்கக்கேடு. அதிலும், அவருடன் பணிபுரிந்தவர்கள் கூட பங்கேற்கவில்லை. முதலில் மரியாதை என்றால் என்ன? என்பதை இந்த தலைமுறை நடிகர்கள் கற்றுக்கொள்ளுங்கள். நான் இறக்கும்போது நான் தயாராக இருக்க வேண்டும். எனக்காக யாரும் தோள் கொடுக்க மாட்டார்கள். இன்றைய நடிகர்கள் மீது ஆத்திரம், ஆத்திரமாக வருகிறது.

வினோத் கன்னா மறைவுக்கு முந்தைய நாள் இரவு நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த விருந்தில், ஏராளமான ஜால்ரா அடிக்கும் நடிகர்களை காண முடிந்தது. ஆனால், வினோத் கன்னா இறுதிச்சடங்கில் வெகு சிலரே கலந்து கொண்டனர். வெளிப்படையாக இருங்கள். உங்கள் மீது கோபம் தான் வருகிறது.

என்னுடைய மகன் ரண்பீர் சிங்கும், மனைவி நீத்து சிங்கும் வெளிநாடு சென்றிருப்பதால், வினோத் கன்னா இறுதிச்சடங்கில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. எனினும், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு காரணம் சொல்ல கூடாது.

இவ்வாறு அதில் ரிஷிகபூர் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com