குடியரசு தினத்தை குறிவைத்த விஷால்

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை குறிவைத்த விஷால்
Published on

`துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். 

இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துவரும் `இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஷாலுடன் ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு (2018) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது படக்குழுவினர் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com