

இதில் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆட்டோ பின்புறம் பலத்த சேதமடைந்தது. மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் ராஜ்குமார்(வயது64) மற்றும் பெண் பயணி சுரேகா(32) ஆகியோர் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வெர்சோவா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஆதித்யாவை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.