

தமிழில் சூரி நடித்த கதாபாத்திரதை மட்டும், தெலுங்கு நடிகரை வைத்து படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்திற்கு தெலுங்கில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் வெளியாவது குறித்து இன்று டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
இதில், ‘இது நம்ம ஆளு’ தெலுங்கில் வெளியாக இருக்கிறது. தமிழில் ஒரு படத்திற்கு மந்திய, மாநில அரசுகள் இணைந்து 30% ஜி.எஸ்.டி. பிடிக்கிறார்கள். ஆனால், தெலுங்கில் 15% மத்திய அரசு மட்டுமே வாங்குகிறது. மாநில அரசு வாங்குவதில்லை. தமிழ் சினிமா மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.