

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.
மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது.
இதனிடையே, வருகிற மே 20-ந் தேதி இப்படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பணிகள் அனைத்தும் முடங்கியதால், மே 20-ந் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டரோ, வீடியோவோ வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.ஆர்.ஆர் படக்குழுவின் இந்த திடீர் அறிவிப்பால் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.