‘யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள்’ - இயக்குநர் செல்வராகவனின் திடீர் பதிவு!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள செல்வராகவன், அவ்வப்போது அறிவுரை கூறுவது, தத்துவம் சொல்வது, விரக்தியான பதிவுகளை ஷேர் செய்வது என இருந்து வருகிறார்.
‘யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில்  நம்பாதீர்கள்’ - இயக்குநர் செல்வராகவனின் திடீர் பதிவு!
Published on

இயக்குநராக மட்டுமல்லாமல், சமீபகாலமாக படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, தனது நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் செல்வராகவன். அவ்வப்போது அவர் பதிவிடும் பதிவுகளும் ரசிகர்களிடையே பெரும் கவனம் ஈர்க்கும்.

அந்தவகையில், தற்போது அவர் ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அப்பதிவில்.,

“யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள். எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவால் அவரது குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா என இணையவாசிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர். சமீபகாலமாகவே அவரது மனைவியுடன் பிரச்னை என்பதுபோல தகவல்கள் பரவிவரும் நிலையில் இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com