

பாலியல் புகார் கூறி திரையுலகை பதற வைத்த நான்கெழுத்து நடிகைக்கு மிரட்டல் வந்ததையடுத்து சென்னையில் குடியேறினாராம்.
தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அவரது புகாரில் சிக்கினார்களாம்.
அவரது வாழ்க்கை படமாகவும் உருவாகி வருகிறதாம். அந்த படத்தை தடை செய்ய சதி நடப்பதாகவும் படக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளார்களாம். இந்த நிலையில் நடிகை தற்போது அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம். சமீப காலமாக நடிகைகள் பலர் அரசியலில் குதித்து எம்.பி, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி வருவதால், நடிகைக்கும் அரசியல் ஆசை வந்துள்ளதாம்.