என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் தொகுதியில் நாளை எடப்பாடி பழனிசாமி 2-வது கட்ட பிரசாரம்
Byமாலை மலர்1 Aug 2019 7:38 AM GMT (Updated: 1 Aug 2019 7:38 AM GMT)
வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை 2-வது கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந்தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்.
இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறார்.
நாளை மாலை 5 மணிக்கு (2-ந் தேதி) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு வேலூர் சென்று அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் வாக்கு கேட்டு பேசுகிறார்.
2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் எடப்பாடி பழனிசாமி வாக்கு கேட்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூரில் முகாமிட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளருக்காக 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதால் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதற்கு பிரசார வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந்தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்.
இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறார்.
நாளை மாலை 5 மணிக்கு (2-ந் தேதி) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு வேலூர் சென்று அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் வாக்கு கேட்டு பேசுகிறார்.
2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் எடப்பாடி பழனிசாமி வாக்கு கேட்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூரில் முகாமிட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளருக்காக 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதால் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதற்கு பிரசார வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X