என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்காட்டுப்பள்ளி கோவில்களில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வழிபாடு
Byமாலை மலர்24 May 2017 4:54 AM GMT (Updated: 24 May 2017 4:54 AM GMT)
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள கோவில்களில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வழிபட்டார்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் வயல்காட்டுத் திடலில் உள்ள சப்தமாதா மற்றும் பிடாரி கோவில் பழைமையானது. இங்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தனது ஆட்சிக் காலத்தில் வழிபட்டு போருக்குச் சென்றதாகவும், பல வெற்றிகளைப் பெற்று பேரரசராக விளங்கியதாகவும் கூறப்படுகிறது.
இக்கோவிலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சென்றார். அங்கு தனியாக ½ மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்தார். இதையடுத்து இளங்காடு லிங்கத்திடலில் உள்ள சிவலிங்கத்தையும் வழிபட்டார்.
பிறகு கச்சமங்கலம் கிராமத்தில் உள்ள சப்த கன்னிமார்கள் கோவிலில் வழிபட்டார். அருகேயுள்ள பழைய அணைக்கட்டைப் பார்வையிட்டு பின்னர் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவரை கிராம மக்கள் வரவேற்றார்.
பா.ஜ.க தஞ்சாவூர் மாவட்டச் செயலர் பூண்டி வெங்கடேசன் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவகுமார், பூதலூர் ஒன்றியத் தலைவர் ஆதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் வயல்காட்டுத் திடலில் உள்ள சப்தமாதா மற்றும் பிடாரி கோவில் பழைமையானது. இங்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தனது ஆட்சிக் காலத்தில் வழிபட்டு போருக்குச் சென்றதாகவும், பல வெற்றிகளைப் பெற்று பேரரசராக விளங்கியதாகவும் கூறப்படுகிறது.
இக்கோவிலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சென்றார். அங்கு தனியாக ½ மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்தார். இதையடுத்து இளங்காடு லிங்கத்திடலில் உள்ள சிவலிங்கத்தையும் வழிபட்டார்.
பிறகு கச்சமங்கலம் கிராமத்தில் உள்ள சப்த கன்னிமார்கள் கோவிலில் வழிபட்டார். அருகேயுள்ள பழைய அணைக்கட்டைப் பார்வையிட்டு பின்னர் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவரை கிராம மக்கள் வரவேற்றார்.
பா.ஜ.க தஞ்சாவூர் மாவட்டச் செயலர் பூண்டி வெங்கடேசன் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவகுமார், பூதலூர் ஒன்றியத் தலைவர் ஆதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X