search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.
    X
    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.

    திருக்காட்டுப்பள்ளி கோவில்களில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வழிபாடு

    தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள கோவில்களில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வழிபட்டார்.
    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் வயல்காட்டுத் திடலில் உள்ள சப்தமாதா மற்றும் பிடாரி கோவில் பழைமையானது. இங்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தனது ஆட்சிக் காலத்தில் வழிபட்டு போருக்குச் சென்றதாகவும், பல வெற்றிகளைப் பெற்று பேரரசராக விளங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இக்கோவிலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சென்றார். அங்கு தனியாக ½ மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்தார். இதையடுத்து இளங்காடு லிங்கத்திடலில் உள்ள சிவலிங்கத்தையும் வழிபட்டார்.

    பிறகு கச்சமங்கலம் கிராமத்தில் உள்ள சப்த கன்னிமார்கள் கோவிலில் வழிபட்டார். அருகேயுள்ள பழைய அணைக்கட்டைப் பார்வையிட்டு பின்னர் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவரை கிராம மக்கள் வரவேற்றார்.

    பா.ஜ.க தஞ்சாவூர் மாவட்டச் செயலர் பூண்டி வெங்கடேசன் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவகுமார், பூதலூர் ஒன்றியத் தலைவர் ஆதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×