என் மலர்
நீங்கள் தேடியது "Kashmiri students"
- "தொடர்ந்து ஏற்படும் அமைதியின்மை காரணமாக அச்சத்தில் வாழ்கிறோம்" என்று துயர அழைப்புகள் வருகின்றன.
- மற்றவை வேறுவிதமாக முடிவு செய்துள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பை பரப்பும் பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு, அமைதியையும் நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் பிடிபி தலைவருமான மெஹபூபா முப்தி தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்களிடமிருந்து "தொடர்ந்து ஏற்படும் அமைதியின்மை காரணமாக அச்சத்தில் வாழ்கிறோம்" என்று துயர அழைப்புகள் வருகின்றன. சில கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைத்து, இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன, மற்றவை வேறுவிதமாக முடிவு செய்துள்ளன" என்று கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலையிட்டு, அனைத்து காஷ்மீர் மாணவர்களும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மெஹபூபா வலியுறுத்தினார்.
கூடுதலாக, சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு ஒரு வலுவான செய்தி அனுப்பப்பட வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண இதுபோன்ற பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
- தாடியை ஷேவ் செய்யாத மாணவர்களுக்கு அப்சென்ட் போடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
- இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் தங்கள் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நர்சிங் கல்லூரியில் படிக்கும் காஷ்மீரி மாணவர்கள் வகுப்புகள் மற்றும் மருத்துவ பணிகளில் பங்கேற்ப தங்களது தாடியை ஷேவ் செய்ய வேண்டும் அல்லது மிக குறைவான அளவு தாடி இருக்குமாறு ட்ரிம் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தாடியை ஷேவ் செய்யாத மாணவர்களுக்கு மருத்துவ அமர்வுகளின் போது அப்சென்ட் போடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், "கல்லூரியின் வழிகாட்டுதல்கள் மாணவர்களின் கலாச்சார மற்றும் மத உரிமைகளை மீறுவதாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் காஷ்மீரி மாணவர்களுடன் கலந்து பேசி அவர்கள் தாடி வைத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை என்று தெரிவித்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்த தாக்குதலால் நாடே பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஒரு மித்த குரல் எழுப்பப்பட்டுள்ளது.
ஆனால் காஷ்மீர் மாணவிகள் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை கொண்டாடி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள என்.ஐ.எம். தனியார் பல்கலைக்கழகத்தில் 2-வது ஆண்டு மருத்துவ படிப்பு பயிலும் மாணவிகள் தல்வீன் மன்சூர், இக்ரா, ஜோரா நசீர், உஸ்மா நசிர் ஆகிய 4 பேர் வாட்ஸ் அப்பில் பயங்கரவாத தாக்குதலை கொண்டாடும் வகையில் படங்களை வெளியிட்டு உள்ளனர்.
காஷ்மீர் மாணவிகள் கொண்டாடும் இந்த படம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் மத்தியில் வேகமாக பரவியது. இது குறித்து அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். பல்கலைக்கழக நிர்வாகம் 4 பேரையும் சஸ்பெண்டு செய்துள்ளது.
இதே போல ஜெய்ப்பூர் போலீஸ் நிலையத்திலும் காஷ்மீர் மாணவிகள் குறித்து பல்கலைக்கழகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 4 மாணவிகள் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதே போல இமாச்சல பிரதேசத்தில் காஷ்மீர் மாணவர் ஒருவர் பயங்கரவாதிகளை புகழ்ந்து சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலை தளங்களில் பயங்கரவாத தாக்குதலை புகழ்ந்தது தொடர்பாக இதுவரை 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PulwamaAttack
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுவதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாவது சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.
குறிப்பாக, உத்தரகாண்ட மாநிலத்தில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களால் மிரட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் மற்ற பகுதிகளில் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக அக்கறைகாட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்த ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துகளை கவனமாக கேட்டறிந்த ராஜ்நாத் சிங், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #OmarmeetsRajnath #safetyofKashmiristudents #Kashmiristudents #PulwamaAttack






