என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெகதீப் தன்கர்"

    • 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21 ராஜினாமா செய்தார்.
    • பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.

    14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 15வது ஜனாதிபதி ஆகியுள்ளார்.

    அவர் பதியேற்ற பின் முதல் முறையாக அவர் தலைமையில் இன்று மாநிலங்களவை நடந்தது.

    அவையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "உங்களுக்கு முன் இந்த அவையின் தலைவராக இருந்தவர், சிறிதும் எதிர்பாராமல் திடீரென விலகினார். பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.

    அவருக்கு பிரவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன்" என்றார்.

    கார்கேவின் பேச்சால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, "புதிய தலைவருக்கு வாழ்த்து கூற வேண்டிய நேரத்தில் கார்கே, தேவையின்றி தன்கர் விவகாரத்தை எழுப்புகிறார்.

    இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.  

    • 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார்.
    • ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் முன் வைத்தனர்.

    ஜனாதிபதி திரௌபதி முர்மு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதியாக இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மந்திரிகளும் முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி முன்னிலையில் காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

    முன்னதாக 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது ஜெகதீப் தன்கர் உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருந்தது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபில் உள்ளிட்டோர், ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பின்னர் என்ன ஆனார்? எங்கு போனார்? என்பது மர்மமாக இருப்பதாக பேசியிருந்தனர். ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் முன் வைத்தனர்.

    இதற்கிடையே அண்மையில் ஜெகதீப் தன்கர் டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்து பண்ணை வீட்டுக்கு குடிபெயர்ந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அவர் உடல்நிலை காரணமாக எங்கும் செல்லாமல் பூரண ஓய்வில் இருந்ததாக விஷயம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில் பதவி விலகி 53 நாட்கள் கழித்து 15வது துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் அவர் இன்று கலந்து கொண்டுள்ளார். பொது வெளியில் தோன்றியதன் மூலம் அவரின் நிலை குறித்து எழுந்த ஊகங்களுக்கு ஜெகதீப் தன்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  

    • தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார்.
    • மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது அதிகாரப்பூர்வ அரசு மாளிகையை காலி செய்துள்ளார்.

    தற்போது தெற்கு டெல்லியில் உள்ள சத்தர்பூரில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்துள்ளார்.

    கடந்த ஜூலை 21, பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜெகதீப் தன்கர் தனது துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

    உடல்நலப் பிரச்னைகளை அவர் காரணம் காட்டி இருந்தாலும், அவரது ராஜினாமா அரசியலில் பேசுபொருளாக மாறியது.

    ராஜினாமாவுக்கு பின் தன்கர் தகவல் ஏதுமின்றி காணாமல் போனதாகவும், பாஜகவின் அழுத்தத்தின் பேரில் அவர் ராஜினாமா செய்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் அவர் தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார் என்றும் தற்போது அங்கிருந்து காலி செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.

    1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

    அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். 

    • எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை

    ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

    உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    இத்தனிடையே, முன்னாள் குடியரசு தினை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இந்நிலையில், ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமித் ஷா, "தன்கர் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது அரசிலமைப்பின் படி சிறப்பாக பணியாற்றினார். மருத்துவக் காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். இதில் தேவையற்ற ஆராய்ச்சிகளை செய்து, ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என நினைப்பது தவறு" என்று தெரிவித்தார். 

    • முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்?
    • ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது?

    ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

    உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று விசிக தலைவர் திருமாவளவனை குற்றம் சாட்டியுள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். வீட்டை சுற்றி ராணுவத்தினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக பணி விலக வைக்கப்பட்டுள்ளார் ஜெகதீப் தன்கர். பதவி விலக நிர்பந்திக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தெரியவில்லை" என்று குற்றம் சாட்டினார். 

    • துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?
    • இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்.

    ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். 

    இந்நிலையில் டெல்லியில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "நாம் ஏன் ஒரு புதிய துணைத் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். நேற்று நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பழைய துணைத் ஜனாதிபதி எங்கே போனார் என்று கேட்டேன்?  

    துணைத் ஜனாதிபதி ராஜினாமா செய்த நாளில், வேணுகோபால் ஜி என்னை அழைத்து, துணைத் ஜனாதிபதி பணியை விட்டு போய்விட்டார் என்று கூறினார். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.

    சிலருக்குத் தெரியும், சிலருக்குத் தெரியாது. ஆனால் அவர் மறைந்திருப்பதாக ஒரு கதையும் இருக்கிறது.

    இந்திய துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?

    ராஜ்யசபாவில் கர்ஜித்தவர் திடீரென்று முற்றிலும் அமைதியாகிவிட்டார்" என்று தெரிவித்தார்.

    மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து பதிலளித்த ராகுல், "பீகாரில் நெருப்பு பற்றி எரிகிறது.

    இந்த நெருப்பைப் பார்க்க அனைத்து தலைவர்களையும் நான் அழைக்கிறேன். அதைத் தடுக்க முடியாது. பீகாரில் நான்கு வயது குழந்தை 'வாக்கு திருடன், வாக்கு திருடன்' என்று கத்துகிறது.

    அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களைத் திருடினர். இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்" என்று கூறினார்.

    • C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ளார்.
    • எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

    துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக (பா.ஜ.க.) கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியது.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்ப்பில் யாரை வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுக்க இன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

    அதன்படி துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த C. P. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
    • எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை

    ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

    உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், முன்னாள் குடியரசு தினை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய தன்கர் தற்போது எங்கிருக்கிறார்?; ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது?; மாநிலங்களவை எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை" என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். 

    • எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
    • நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

    குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கர் எங்கிருக்கிறார் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.

    ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

    உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து பேசிய கபில் சிபில், ராஜினாமா செய்த பின்னர் ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

    அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை. முதல் நாள் நான் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், அவரது தனிப்பட்ட செயலாளர் தொலைபேசியை எடுத்து அவர் ஓய்வெடுப்பதாகக் கூறினார். எனது அரசியல் சகாக்கள் பலர் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

    தனது பதவிக் காலம் முழுவதும் அரசாங்கத்தை ஆதரித்த தன்கரைப் இப்போது எதிர்க்கட்சிகள்தான் பாதுகாக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் "அவருக்கு எங்காவது சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்ன பிரச்சனை? இதுபோன்ற விஷயங்களை மற்ற நாடுகளில் மட்டுமே நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    உள்துறை அமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களிடம் நிறைய வளங்கள் உள்ளன. நீங்கள் வங்கதேசத்தினரை திருப்பி அனுப்புகிறீர்கள்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எங்கள் துணை ஜனாதிபதி. எனவே அவர் இருக்கும் இடம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிடுங்கள்" என்று கபில் சிபல் கோரினார்.   

    • வேட்புமனுக்கள் திரும்பப் பெற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்படும்.
    • அனைத்து எம்.பி.க்களும் இந்தத் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களிப்பார்கள்.

    துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

    அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆம் தேதி என அறிவித்துள்ளது.

    வேட்புமனுக்கள் பரிசீலனை ஆகஸ்ட் 22 ஆம் தேதியும், வேட்புமனுக்கள் திரும்பப் பெற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்படும்.

    வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும், வாக்கு எண்ணிக்கை அதே நாளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அனைத்து எம்.பி.க்களும் இந்தத் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களிப்பார்கள்.

    துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஜூலை 21 ஆம் தேதி உடல்நலக் காரணங்களால் திடீரென ராஜினாமா செய்ததால் அந்தப் பதவி காலியானது குறிப்பிடத்க்கது.

    • அவரது பதவிக்காலம் 2027 இல் முடிவடைய இருந்தது.
    • வேறு ஏதோ காரணத்தால் ஏற்பட்டது என்று காங்கிரஸ் கூறுகிறது.

    உடல்நலக்குறைவை காரணம் காட்டி திங்கள்கிழமை இரவு துணை ஜனாதிபதி பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வதற்கு சற்று முன்பு ஜக்தீப் தன்கர் ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.

    திங்கள்கிழமை மாலையில் தன்கர் ராஷ்டிரபதி பவனில் வைத்து ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    அரை மணி நேரம் கழித்து, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக தன்கர் அறிவித்தார்.

    74 வயதான தன்கர், ஆகஸ்ட் 2022 இல் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2027 இல் முடிவடைய இருந்தது.

    மாநிலங்களவை தலைவராகவும் தன்கர், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தனது ராஜினாமாவை அறிவித்தது விவாதத்தை தூண்டியது.

    இந்த எதிர்பாராத ராஜினாமா உடல்நலக் காரணங்களால் அல்ல, வேறு ஏதோ காரணத்தால் ஏற்பட்டது என்று காங்கிரஸ் கூறுகிறது.

    இதற்கிடையில், தன்கர் ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எடுத்த ஒரு குறிப்பிடத்தக்க நிலைப்பாடு காரணமாக அவரது ராஜினாமா நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    திங்களன்று, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் முன்மொழிவை தன்கர் ஏற்றுக்கொண்டார். இது குறித்து மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட அனைவரிடமிருந்தும் கையொப்பங்களை சேகரித்து நீதிபதி வர்மாவை நீக்குவதற்கான தீர்மானத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகி வந்தது. தங்கரின் அவசர நடவடிக்கையே மத்திய அரசின் அதிருப்திக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

    • மொத்தம் 427 எம்.பி.க்களின் ஆதரவு பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு கிடைக்கும்.
    • ஜனாதிபதி தேர்தலுக்கும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.

    ஜனாதிபதியை முன் அனுமதி பெறாமல் திடீரென சந்தித்து அவர் பதவி விலகியது நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை உருவாக்கி உள்ளது. அவரது பதவி விலகலுக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய சொல்லி நீக்கப்பட்டார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

    ஆனால் உடல்நலக்குறைவு காரணமாகவே பதவி விலகி இருப்பதாக ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். என்றாலும் துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை நீடித்தபடியே உள்ளது.

    இதற்கிடையே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. ஜெகதீப் தன்கர் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அரசுக்கு அனுப்பி வைப்பார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

    இந்த சூழ்நிலையில் துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இதைத்தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கும்.

    துணை ஜனாதிபதி பதவியில் இருப்பவர் உயிரிழப்பு, ராஜினாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக்காலமான 5 ஆண்டுகளுக்குள் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விதியின்படி அடுத்த புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் டெல்லி பாராளுமன்ற மக்களவை மற்றும் மேல்சபை ஆகிய இரு சபைகளின் எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இரு சபைகளின் நியமன எம்.பி.க்களும் வாக்களிக்க முடியும்.

    543 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல 245 உறுப்பினர்களை கொண்ட மேல்சபையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் இரு அவைகளையும் சேர்த்து எம்.பி.க்களின் பலம் 782 ஆக உள்ளது.

    இதில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபர் வெற்றி பெற தகுதி உள்ள அனைத்து எம்.பி.க்களும் வாக்களிக்கும் நிலையில் குறைந்த பட்சம் 392 வாக்குகளைப் பெற வேண்டும். பாராளுமன்ற மக்களவையில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 542 எம்.பி.க்களில் 293 பேர் உள்ளனர்.

    பாராளுமன்ற மேல்சபையில் தற்போது உள்ள 240 எம்.பி.க்களில் 134 பேரின் ஆதரவு பா.ஜ.க. கூட்டணிக்கு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைக்கும்.

    இதனால் மொத்தம் 427 எம்.பி.க்களின் ஆதரவு பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு கிடைக்கும். எனவே பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் துணை ஜனாதிபதி வேட்பாளர் மிக மிக எளிதாக வெற்றி பெறுவார்.

    பாராளுமன்ற இரு சபைகளிலும் இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 355 எம்.பி.க்கள் தான் உள்ளனர். மக்களவையில் 249 எம்.பி.க்களும், மாநிலங்கள் அவையான மேல் சபையில் 106 எம்.பி.க்களும் உள்ளனர். எனவே எதிர்க்கட்சிகள் நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.

    அதே சமயத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் வாக்குகளுக்கு அவர்களது மாநில எல்லை மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப மதிப்பு மாறுபடும். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.பி.க்களின் வாக்குகள் மட்டுமே அப்படியே கருத்தில் கொள்ளப்படும்.

    பொதுவாக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்களிக்கும்போது அந்தந்த கட்சியின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது சட்ட விதியாகும். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் எம்.பி.க்களுக்கு இது பொருந்தாது. எம்.பி.க்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மனுதாக்கல் செய்பவரை 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். 20 எம்.பி.க்கள் வழிமொழிய வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி இருவருக்கும் இடையே நேரடி பலப்பரீட்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    துணை ஜனாதிபதி தேர்தலை 3 பாராளுமன்ற மூத்த அதிகாரிகளை கொண்ட குழு நடத்தும் என்று தெரிய வந்துள்ளது. ஓட்டுப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும்.

    ஒவ்வொரு எம்.பி.யும் வாக்களிப்பதற்கு அரசு சார்பில் பேனா வழங்கப்படும். அந்த பேனாவை பயன்படுத்திதான் எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும். சொந்த பேனாவை பயன்படுத்தி 'டிக்' செய்தால் அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்படும்.

    ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகள் சில மணி நேரங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    துணை ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதை நீண்ட நாட்களுக்கு அனுமதிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக தேர்தல் அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×