போக்குவரத்து விதிமீறல் - சி.எஸ்.கே. வீரர் எம்.எஸ்.தோனிக்கு ரூ.1000 அபராதம்!

தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னையில் பயிற்சியில் உள்ளார்ராஞ்சியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
Mahendra Singh Dhoni has been fined Rs. 1000.
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி, கான்கே ரிங் சாலையில் பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் அருகே அவரது சொகுசு கார் அதிவேகத்தில் சென்றதை அங்குள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்ததையடுத்து, மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 183-ன் கீழ் அவருக்கு டிஜிட்டல் முறையில் 'இ-சலான்'அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கண்காணிப்பு அமைப்பு நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் ரிங் ரோடு (வட்டச் சாலை) பகுதிகளில் 24/7 செயல்பாட்டில் உள்ளது என்றும், இது அதிவேகம், சிக்னலை மீறுதல் மற்றும் பிற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து வருகிறது என்றும் ராஞ்சி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார். இத்தகைய விதிகளை மீறும் யாராக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

தற்போது தோனி ஐபிஎல் 2026 போட்டிகளுக்காகச் சென்னையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ராஞ்சியில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com