அறுவை சிகிச்சை செய்து கொண்ட செரீனா வில்லியம்ஸ்..

அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஏராளமான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட செரீனா வில்லியம்ஸ்..
Published on

மகளிர் டென்னிஸ்ஸில் உலகின் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வென்றுள்ள செரீனா கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், கடந்த மே மாதம் எனக்கு கட்டி இருப்பத கண்டுபிடித்தேன். எம்.ஆர்.ஐ. எடுத்ததில், அது நீர்க்கட்டி என்று தெரியவந்தது என தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், "நானும் இன்னமும் உடல்நலம் தேறி வருகிறேன், சிறப்பாக உணர்கிறேன். எப்போதும் உடல்நலம் தான் முன்னுரிமை," என்று செரீனா வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

உடலில் நீர்க்கட்டி கண்டறியப்பட்டதும் அதனை அகற்றாமல் செரீனா வில்லியம்ஸ் ஏராளமான பரிசோதனைகளை எடுத்துக் கொண்டார். எனினும், கட்டி ஓரளவுக்கு வளர்ந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு, அதனை அகற்றியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com