உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சிங்கப்பூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
கிதாம்பி ஸ்ரீகாந்த்
கிதாம்பி ஸ்ரீகாந்த்
Published on

வெல்வா:

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ ஆகியோர் மோதினர்.  

இதில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்ந்தை வீழ்த்தி பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டியில் தோற்றதால் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் கிதம்பி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com