பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே புள்ளியில் உலக சாதனையை தவற விட்ட இந்திய வீராங்கனை

பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
Sheetal Devi
Published on

17 ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவை பிரான்ஸ் சிறப்பாக நடத்தியது.

இதில் 167 நாடுகளை சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய வில் வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி ஒருபுள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார்.

தகுதிச் சுற்றில் அற்புதமாக விளையாடிய ஷீத்தல் 703 புள்ளிகளை பெற்றார். எனினும், 704 புள்ளிகளை பெற்ற துருக்கி வீராங்கனை சாதனை படைத்தார். ஒருபுள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட போதிலும், வில் வித்தையில் 700 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பாராலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com