அவருக்கு சதம் ஒரு போதை- கோலியை புகழ்ந்து தள்ளிய சேவாக்

விராட் கோலிக்கு 100 ரன்கள் மீது ஒருவிதமான போதை இருக்கிறது. விராட் இருந்தால் எதுவும் சாத்தியமே என கூறினார்.
அவருக்கு சதம் ஒரு போதை- கோலியை புகழ்ந்து தள்ளிய சேவாக்
Published on

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி தோல்வியடைந்தது. முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு 53-வது ஒருநாள் சதம் ஆகும். முதல் ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்திருந்தார்.

இந்நிலையில் நாம் சதங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அசால்ட்டாக அடிக்கிறார் என விராட் கோலியை முன்னாள் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலிக்கு 100 ரன்கள் மீது ஒருவிதமான போதை இருக்கிறது. நாம் சதங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அசால்ட்டாக அடித்து நொறுக்குகிறார். விராட் இருந்தால் எதுவும் சாத்தியமே என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com