முரளி விஜய் அசத்தல் - கோவை அணி வெற்றி பெற 136 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி

டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.திருச்சி அணியின் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
இரு அணி கேப்டன்கள்
இரு அணி கேப்டன்கள்
Published on

கோவை:

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

இந்நிலையில், 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் 18 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ராஜகோபால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். சந்தோஷ் ஷிவ் 28 ரன்னில் வெளியேறினார். நிரஞ்சன் 17 ரன்னிலும், ஆகாஷ் சும்ரா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் முரளி விஜய் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், திருச்சி அணி 135 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, கோவை அணி 136 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

கோவை அணி சார்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்டும், ஷாருக் கான், திவாகர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com