#T20WorldCup அரையிறுதி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
#T20WorldCup அரையிறுதி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதற்கு முன் 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com